கோவையில் முதல்முறையாக 'ஹைட்ரோதெரபி' சிகிச்சை மையம் துவக்கம்

கோவையில் முதல்முறையாக பல்வகை சிறப்பு பிசியோதெரபி மையம் டாடாபாத், வடகோவை ரயில் நிலையம் சாலையில் துவக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபி மையத்தின் முக்கிய சிறப்பம்சமாக 'ஹைட்ரோதெரபி' மையம் என்னும் புதிய வகையான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வகை சிகிச்சை முறைகள் பற்றி பிசியோதெரபி மையத்தின் நிறுவனர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது, தசை, எலும்பு, நரம்பு மண்டல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வேகமான மற்றும் நீண்ட கால நிவாரணத்தை தரும் வகையில் இந்த 'ஹைட்ரோதெரபி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் சிகிச்சை நரம்பு தசை பிரச்சனைகளுக்கு இவ்வகை சிகிச்சை நிரந்தர நிவாரணம் கொடுக்கிறது. வலி மற்றும் நரம்பு தசை பிரச்சனைகளுக்கு நோயாளிகள் தண்ணீரில் மிதக்கும் இந்த ஹைட்ரோதெரபி சிகிச்சை மேற்கொள்வதன் மூலமாக நோயாளிகளின் தசை நிலைகளை சூடான நீரில் ஒரு மணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் வலி நிவாரணம் கிடைக்கிறது. இதன் தொடர் சிகிச்சையின் மூலம் நோயாளிகள் எளிதில் உடல்நலம் பெற உதவுகிறது. மேலும், ஹைட்ரோதெரபி அனைத்து வகையான வலி நிவாரணத்திற்காகவும், உடல் பருமனை குணப்படுத்தவும் உதவுகிறது.

ஹைட்ரோதெரபியில் முக்கியமானது என்னவென்றால் நீரின் வெப்பநிலை ஆகும். இந்தியாவின் ஹைட்ரோதெரபி மையங்களில் பெரும்பாலானவை குளிர் நீர் சிகிச்சை செய்யப்படுகிறது, ஆனால், வெதுவெதுப்பான நீர் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவருகிறது. நீர் சிகிச்சை வெப்பநிலையில் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் 38 டிகிரி இடையே ஹைட்ரோதெரபியின் சிகிச்சையில் வலிக்கு சிறந்த காரணியாக கருதுகிறது. "பொதுவாக சிகிச்சையில் அறிகுறிகள் ஏற்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நிரந்தர நிவாரணம் அளிக்கிறது.

முறையான பிசியோதெரபி சிகிச்சை மூலம் ஐந்து நாட்களில் பலன் பெறலாம். இதன் மூலம் பல அறுவை சிகிச்சைகளின் விளைவுகளை தவிர்க்கலாம். இந்த சிகிச்சை மேற்கு மற்றும் வளைகுடாவில் பிரபலமாக உள்ளது. ஹைட்ரோதெரபி சிகிச்சை உடல் பருமன் சிகிச்சைக்கும் உதவுகிறது. "ஹைட்ரோதெரபி, பல்வேறு பயிற்சிகள் செய்வதன் மூலம் முற்றிலும் நோயாளிகள் குணமடைகின்றனர். முழங்கால்களில் தாங்க முடியாத வலியில் அவதிப்படுபவர்கள் 10 நாள் ஹைட்ரோதெரபி அமர்வு மூலம் முழுமையான சிகிச்சைக்கு பின் ஒரு நிரந்தர தீர்வு பெற முடியும்" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...