கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேளாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் பல்கலைக் கழக வளாகம், திருமந்திரம் கலையரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-வது முதல் பட்டயப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் தங்களது சுயவிபரம், கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதி சான்று அசல் மற்றும் நகல்கல் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் பல்கலைக் கழக வளாகம், திருமந்திரம் கலையரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-வது முதல் பட்டயப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் தங்களது சுயவிபரம், கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதி சான்று அசல் மற்றும் நகல்கல் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.