வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வேலுச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வால்பாறை வனச்சரக ஊழியர்கள் டாப்சிலிப்பில் இருந்து வரவழைக்கப்பட்ட கலீம் என்ற கும்கி யானையை வைத்து ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.