பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ரயில் இயக்கப்பாடாததை கண்டித்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டி குறைபாடு என காரணம் கூறுவதால், ரயில் பெட்டி வாங்க பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.
போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ரயில் இயக்கப்பாடாததை கண்டித்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டி குறைபாடு என காரணம் கூறுவதால், ரயில் பெட்டி வாங்க பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.