பொள்ளாச்சி- தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்- அனைத்து கட்சி முடிவு

பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ரயில் இயக்கப்பாடாததை கண்டித்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டி குறைபாடு என காரணம் கூறுவதால், ரயில் பெட்டி வாங்க பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...