கிணத்துக்கடவு அருகே உறவினர் இறந்த தகவலை அடுத்து ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த 24 பேர் துக்கம் விசாரிக்க மதுக்கரை வழியாக கிணத்துக்கடவு நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, மதுக்கரை பாலத்துரை எல்அன்டி சாலை அருகே வேனின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 24 பேரில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. கண்டெய்னர் லாரி மோதியதில் வேன் சாலையை விட்டு கீழே இறங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 24 பேரில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. கண்டெய்னர் லாரி மோதியதில் வேன் சாலையை விட்டு கீழே இறங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.