கோவை மாவட்டம், பனைமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் மனோகரன், செல்வி. ஒரு கறவை மாட்டினைக் கொண்டு அதன் மூலம் பெறப்படும் பாலினை விநியோகம் செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மனோகரனின் மாடு புற்களை மேய்ந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மாட்டின் உடல் அதன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து மனோகரன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக அன்றாடம் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவர். இந்நிலையில், இன்று டின்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாடு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அசம்பாவிதமாக மனிதர்களுக்கு இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளிக் குழந்தைகளின் உயிர்களுக்கும் உத்திரவாதமில்லை. மின்சார வாரியத்துறையினர் மாதம் ஒரு நாள் மின்சார துண்டிப்பு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், அது முறையாக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டினர்.
இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரியத்துறையினர் மற்றும் பணியாட்கள் அப்பகுதி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி நின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மனோகரனின் மாடு புற்களை மேய்ந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மாட்டின் உடல் அதன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து மனோகரன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக அன்றாடம் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவர். இந்நிலையில், இன்று டின்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாடு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அசம்பாவிதமாக மனிதர்களுக்கு இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளிக் குழந்தைகளின் உயிர்களுக்கும் உத்திரவாதமில்லை. மின்சார வாரியத்துறையினர் மாதம் ஒரு நாள் மின்சார துண்டிப்பு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், அது முறையாக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டினர்.
இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரியத்துறையினர் மற்றும் பணியாட்கள் அப்பகுதி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி நின்றனர்.