டி.டி.வி. தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி



டி.டி.வி.தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார் எனவும் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிச் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"நாங்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகளை டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகின்றார். இது செல்லாது. தினகரன் உத்திரவிற்கு அதிமுக கட்டுப்படாது. தனியாக தினகரன் பேரவை என துவங்கி அதில் உள்ளவர்களை நீக்கட்டும்.

தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்களை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். நாஞ்சில் சம்பத் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மேகதாது விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டனர். தினகரனால் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் எதுவும் செல்லாது". இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...