கோவை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறையினர்களுக்கான 57-வது தடகள போட்டி இன்று துவங்கியது. வரும் புதன் கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கின்றனர்.
கோவை நேருவிளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான 57-வது தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. இந்த தடகள போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.
இந்த தடகள போட்டிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில், ஆயுதப்படை, அதிரடிப் படை, சென்னை பெருநகரம், வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 7 காவல் மண்டலங்களை சேர்ந்த 320-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆண் காவலர்களுக்கு 23 வகையான தடகள போட்டி, பெண் காவலர்களுக்கு 19 வகையான தடகள போட்டிகள், மூத்த காவல் துறையினருக்கு தனியாக தடகள போட்டிகள் என மொத்தம் 60 தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றது.
தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் ஆயுதப் படை அணியினர் 17 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மத்திய மண்டலம் 11 பதக்கங்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.
கோவை நேருவிளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான 57-வது தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. இந்த தடகள போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.
இந்த தடகள போட்டிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில், ஆயுதப்படை, அதிரடிப் படை, சென்னை பெருநகரம், வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 7 காவல் மண்டலங்களை சேர்ந்த 320-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆண் காவலர்களுக்கு 23 வகையான தடகள போட்டி, பெண் காவலர்களுக்கு 19 வகையான தடகள போட்டிகள், மூத்த காவல் துறையினருக்கு தனியாக தடகள போட்டிகள் என மொத்தம் 60 தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றது.
தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் ஆயுதப் படை அணியினர் 17 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மத்திய மண்டலம் 11 பதக்கங்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.