சூலூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரிகளில் உள்ள சில நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுவதாக அரசூர் மற்றும் பொத்தியம்பாளையம் பகுதி மக்கள், விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரியின் உள்ளே பல பவுண்டரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படுவதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. புகை போக்கிகளால் வரும் புகை நேரடியாக பாதிக்கிறது.
குறிப்பாக, பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மண் மற்றும் இரசாயனக் கழிவுகள் மழைநீரில் கரையும் வகையில் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. பவுண்டரிகளில் இருந்து வெளிவரும் மழைநீர் முற்றிலும் கெட்டு சூரமடை ஓடை மற்றும் குட்டை பரமசிவன் கோவில் ஓடை, குட்டையில் கரிய நிறத்தில் கலக்கிறது. இதனால், அக்கழுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் செடிகளின் மீது கரிய மண் படிந்துள்ளதால் கால்நடைகளை உணவிற்காக விடமுடியவில்லை.
எனவே, கோ- இந்தியா பவுண்டரிகளில் முறையாக நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திறந்த வெளியில் பிற இடங்களில் கொட்டியுள்ள கழிவுகளை நிர்வாகமே திருப்பி எடுத்து விட வேண்டும். கோ- இந்தியா தவிர மற்ற பவுண்டரிகளுக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரியின் உள்ளே பல பவுண்டரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படுவதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. புகை போக்கிகளால் வரும் புகை நேரடியாக பாதிக்கிறது.
குறிப்பாக, பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மண் மற்றும் இரசாயனக் கழிவுகள் மழைநீரில் கரையும் வகையில் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. பவுண்டரிகளில் இருந்து வெளிவரும் மழைநீர் முற்றிலும் கெட்டு சூரமடை ஓடை மற்றும் குட்டை பரமசிவன் கோவில் ஓடை, குட்டையில் கரிய நிறத்தில் கலக்கிறது. இதனால், அக்கழுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் செடிகளின் மீது கரிய மண் படிந்துள்ளதால் கால்நடைகளை உணவிற்காக விடமுடியவில்லை.
எனவே, கோ- இந்தியா பவுண்டரிகளில் முறையாக நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திறந்த வெளியில் பிற இடங்களில் கொட்டியுள்ள கழிவுகளை நிர்வாகமே திருப்பி எடுத்து விட வேண்டும். கோ- இந்தியா தவிர மற்ற பவுண்டரிகளுக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.