கோ- இந்தியா பவுண்டரிகளில் செயல்படும் நிறுவனங்களால் விவசாயம் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

சூலூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரிகளில் உள்ள சில நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுவதாக அரசூர் மற்றும் பொத்தியம்பாளையம் பகுதி மக்கள், விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரியின் உள்ளே பல பவுண்டரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படுவதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. புகை போக்கிகளால் வரும் புகை நேரடியாக பாதிக்கிறது. 

குறிப்பாக, பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மண் மற்றும் இரசாயனக் கழிவுகள் மழைநீரில் கரையும் வகையில் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. பவுண்டரிகளில் இருந்து வெளிவரும் மழைநீர் முற்றிலும் கெட்டு சூரமடை ஓடை மற்றும் குட்டை பரமசிவன் கோவில் ஓடை, குட்டையில் கரிய நிறத்தில் கலக்கிறது. இதனால், அக்கழுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் செடிகளின் மீது கரிய மண் படிந்துள்ளதால் கால்நடைகளை உணவிற்காக விடமுடியவில்லை.

எனவே, கோ- இந்தியா பவுண்டரிகளில் முறையாக நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திறந்த வெளியில் பிற இடங்களில் கொட்டியுள்ள கழிவுகளை நிர்வாகமே திருப்பி எடுத்து விட வேண்டும். கோ- இந்தியா தவிர மற்ற பவுண்டரிகளுக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...