விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஹனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி நாளினைத் தொடர்ந்து மூன்றாம் நாள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை, போத்தனூர் சாரதா மில் சாலை- சுந்தராபுரம்- பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் குறிச்சி குளத்தில் கரைக்கப்படவுள்ளன.
குனியமுத்தூர் தர்மராஜா கோவில்- பாலக்காடு சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குனியமுத்தூர் நீர்நிலையில் கரைக்கப்படவுள்ளன.
இதனால், மேற்குறிப்பிட்ட சாலை வழியாக இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக செல்லும் வாகனங்களும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி நாளினைத் தொடர்ந்து மூன்றாம் நாள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை, போத்தனூர் சாரதா மில் சாலை- சுந்தராபுரம்- பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் குறிச்சி குளத்தில் கரைக்கப்படவுள்ளன.
குனியமுத்தூர் தர்மராஜா கோவில்- பாலக்காடு சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குனியமுத்தூர் நீர்நிலையில் கரைக்கப்படவுள்ளன.
இதனால், மேற்குறிப்பிட்ட சாலை வழியாக இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக செல்லும் வாகனங்களும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.