கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஹனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி நாளினைத் தொடர்ந்து மூன்றாம் நாள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை, போத்தனூர் சாரதா மில் சாலை- சுந்தராபுரம்- பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் குறிச்சி குளத்தில் கரைக்கப்படவுள்ளன.

குனியமுத்தூர் தர்மராஜா கோவில்- பாலக்காடு சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குனியமுத்தூர் நீர்நிலையில் கரைக்கப்படவுள்ளன.

இதனால், மேற்குறிப்பிட்ட சாலை வழியாக இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக செல்லும் வாகனங்களும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...