அமெரிக்காவின் சிஐஏ-விடம் இந்தியர்களின் ஆதார் விவரங்கள் : உண்மையை உடைத்த விக்கிலீக்ஸ்.!

கடந்த வெள்ளிக்கிழமை, விக்கிலீக்ஸ் நம்பமுடியாத தகவலொன்றை வெளியிட்டது. அதாவது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ) ஆனது ரகசியமாக இந்தியர்களின் ஆதார் தரவை அணுகுவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் தொழில்நுட்ப வழங்குநரான கிராஸ் மேட்ச் டெக்னாலஜீஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்லேன் (Expresslane) என்ற கருவியின் உதவியுடன் இந்த அணுகலை அமெரிக்க அரசாங்கம் பெறுவதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

மென்பொருளில் நிபுணத்துவம்



கிராஸ் மெட்ரிக் டெக்னாலஜிஸ் என்பது பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அமெரிக்க-அடிப்படையிலான நிறுவனம். வெளியான விக்கிலீக்ஸ் அறிக்கையின் படி, ஆதார் திட்டத்திற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மூலம் சான்றளிக்கப்பட்ட முதல் பயோமெட்ரிக் சாதனங்களில் இந்நிறுவன சாதனமும் ஒன்றாகும்.

பயோமெட்ரிக் சேகரிப்பு










விக்கிலீக்ஸ் பதிவேற்றிய ஆவணங்களானது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் தொழில்நுட்ப சேவைகள் (ffice of Technical Services - OTS) அலுவலகத்தினுள், உலகெங்கிலும் உள்ள சேவைகளுடன் தொடர்புகொள்வதற்க்கான ஒரு பயோமெட்ரிக் சேகரிப்பு அமைப்பை கொண்டுள்ளதாக கூறுகிறது.

இரகசிய தகவல் சேகரிப்பு கருவி



"சிஐ-வின் ஒரு பிரிவான தொழில்நுட்ப சேவைகள் அலுவலகம், உலகம் முழுவதும் உள்ள தொடர்பு சேவைகளை அணுகுமொரு பயோமெட்ரிக் சேகரிப்பு முறைமையை (biometric collection system) கொண்டுள்ளது. இந்த 'தன்னார்வ பகிர்வு' வெளிப்படையாக சிஏஐ-வால் நிகழ்த்தப்படவில்லை. ஏனென்றால் எக்ஸ்பிரஸ்லேன் (ExpressLane) என்பது இரகசிய தகவல் சேகரிப்பு கருவியாகும். கான் மூலம் தகவல் சேகரிப்புகளை இரகசியமாக சிஐஏ பெறுகிறது" என்று விக்கிலீக்ஸ் வலைத்தள அறிக்கை தெரிவிக்கிறது.

ஒசாமா பின்லேடனை அடையாளம்







மேலும், "எக்ஸ்பிரஸ்லேன் கருவியின் முக்கிய கூறுகளானது, சட்ட அமலாக்கம் மற்றும் நுண்ணறிவு சமூகத்திற்கான பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் கொண்ட அமெரிக்க நிறுவனமான கிராஸ் மேட்ச் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம், ஒசாமா பின்லேடனை அடையாளம் கண்டு கொலை செய்தபோது இந்த நிறுவனத்தின் பெயர் செய்திகளில் அடிப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றும் விக்கிலீக்ஸின் அறிக்கை கூறுகிறது.

ஒற்றர்கள் கைகளில் ஆதார்







முதலில் "இந்தியாவின் தேசிய அடையாள அட்டை தரவுத்தளம், சிஐஏ உளவாளிகளால் ஏற்கனவே திருடப்பட்டுவிட்டதா.?" என்ற கட்டுரையை இணைத்து ட்வீட் ஒன்று செய்தது, பின்னர் மற்றொரு ட்வீட்டில் "ஒற்றர்கள் கைகளில் ஆதார்" என்று ஒரு கட்டுரையையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அறிக்கைகள் படி, விக்கிலீக்ஸ் கூற்றுக்கள் அனைத்தையும் இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...