கோவை மேற்கு மண்டலம், 18வது வார்டில், வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்துார் செல்லும் ரோட்டில், வீரகேரளம் கிராமம் பாரதி நகரில், குழந்தைகள் காப்பகத்துக்கு ஏழு சென்ட், பூங்கா அமைக்க, 40 சென்ட் என 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டு இருந்தது. பூங்கா அமைக்க வேண்டிய இடத்தில், கோவில் மற்றும் ஒரு வீடு கட்டப்பட்டு உள்ளது. பூங்கா இடம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது.

குழந்தைகள் காப்பகத்துக்கான இந்த இடத்தை வீரசிவானந்தம் என்பவர் ஆக்கிரமித்து, நான்கு ஆண்டுகளாக, மீன் மார்க்கெட் நடத்தி வந்தார். அதை அகற்றிக் கொள்ளுமாறு, மாநகராட்சியால் நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் அகற்றாததால், அந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு தற்போது அந்த ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல், இதற்கு அருகிலுள்ள கண்ணப்பன் நகரிலும், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 50 சென்ட் ரிசர்வ் சைட்டும், 30 அடி ரோடும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி அமைக்கபட்டு 50 சென்ட் நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டுள்ளது.

எனவே, நகரமைப்பு பிரிவினர் 'சர்வே' செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அப்பகுதியில் பூங்கா இடத்தை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

குழந்தைகள் காப்பகத்துக்கான இந்த இடத்தை வீரசிவானந்தம் என்பவர் ஆக்கிரமித்து, நான்கு ஆண்டுகளாக, மீன் மார்க்கெட் நடத்தி வந்தார். அதை அகற்றிக் கொள்ளுமாறு, மாநகராட்சியால் நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் அகற்றாததால், அந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு தற்போது அந்த ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல், இதற்கு அருகிலுள்ள கண்ணப்பன் நகரிலும், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 50 சென்ட் ரிசர்வ் சைட்டும், 30 அடி ரோடும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி அமைக்கபட்டு 50 சென்ட் நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டுள்ளது.

எனவே, நகரமைப்பு பிரிவினர் 'சர்வே' செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அப்பகுதியில் பூங்கா இடத்தை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.