குழந்தைகள் காப்பகம் அமைப்பதற்கான பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மாநகராட்சி அதிரடி

கோவை மேற்கு மண்டலம், 18வது வார்டில், வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்துார் செல்லும் ரோட்டில், வீரகேரளம் கிராமம் பாரதி நகரில், குழந்தைகள் காப்பகத்துக்கு ஏழு சென்ட், பூங்கா அமைக்க, 40 சென்ட் என 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டு இருந்தது. பூங்கா அமைக்க வேண்டிய இடத்தில், கோவில் மற்றும் ஒரு வீடு கட்டப்பட்டு உள்ளது. பூங்கா இடம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது.



குழந்தைகள் காப்பகத்துக்கான இந்த இடத்தை வீரசிவானந்தம் என்பவர் ஆக்கிரமித்து, நான்கு ஆண்டுகளாக, மீன் மார்க்கெட் நடத்தி வந்தார். அதை அகற்றிக் கொள்ளுமாறு, மாநகராட்சியால் நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் அகற்றாததால், அந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு தற்போது அந்த ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.



அதேபோல், இதற்கு அருகிலுள்ள கண்ணப்பன் நகரிலும், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 50 சென்ட் ரிசர்வ் சைட்டும், 30 அடி ரோடும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி அமைக்கபட்டு 50 சென்ட் நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டுள்ளது. 



எனவே, நகரமைப்பு பிரிவினர் 'சர்வே' செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அப்பகுதியில் பூங்கா இடத்தை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...