தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சுகாதார செவிலியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பிக்மி (pregnant infant chart monitoring evaluation) முறையை மாற்றி குடும்ப பதிவேடு மற்றும் தகுதியான இணை முறையை பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
இப்போது சுகாதாரத் துறை நடைமுறைப்படுத்தி உள்ள முறையால் கர்பிணி பெண்ணின் பெயர், கணவர் பெயர், முழு உடல் பரிசோதனை விபரம், குழந்தை பிறந்த விபரங்கள் உள்ளிட்டவைகளை கணினியில் பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவால் செவிலியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த முறையினை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டுமெனவும் கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பிக்மி (pregnant infant chart monitoring evaluation) முறையை மாற்றி குடும்ப பதிவேடு மற்றும் தகுதியான இணை முறையை பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
இப்போது சுகாதாரத் துறை நடைமுறைப்படுத்தி உள்ள முறையால் கர்பிணி பெண்ணின் பெயர், கணவர் பெயர், முழு உடல் பரிசோதனை விபரம், குழந்தை பிறந்த விபரங்கள் உள்ளிட்டவைகளை கணினியில் பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவால் செவிலியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த முறையினை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டுமெனவும் கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.