கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது தேவைகளை எடுத்துரைத்து மனுக்களாக வழங்கினர். மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துபோய் உள்ளதால் மாவட்டம் முழுவதிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சராசரி மழை அளவாக வருடத்திற்கு 623.5 மி.மீ உள்ளது. ஆகஸ்ட் 2017 மாதம் வரை 225 எம்.எம் வரப்பெற்றுள்ளது. இதில் ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் அதிக மழை பொழிவு பெறப்பட்டுள்ளது. அணைகளின் நீர் மட்டம் சோலையார் அணையில் 75.20 அடியும் ஆழியார் அணையில் 67.90 அடியும் பரம்பிக்குளம் அணையில் 23.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. பயிர் சாகுபடி பரப்பு டிசம்பர் இதுவரை 34111 ஹெக்டேரில் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது.



சோளம் 6229 ஹெக்டேர், மக்காச்சோளம் 342 ஹெக்டேர், பயிறு வகைகள் 1452 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 2733 ஹெக்டேர், மிளகாய், கத்தரி, வெங்காயம, தக்காளி, ஆகிய காய்கறி பயிர்கள் 3809 ஹெக்டேர் அடங்கும்.

விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய விதை இருப்பு நிலவரமானது நிலக்கடலை 6.150 மெட்ரிக் டன், பாசிப்பயறு, துவரை, உளுந்து ஆகியவை 6.515 டன்னும், மக்காச்சோளம், குதிரைவாலி, திணை உள்ளிட்டவை 0.875 டன்னும் அரசு மற்றும் தனியார் விதை கிடங்குகளில் இருப்பு உள்ளது. இவற்றினை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

மாவட்டத்தில் உரம் இருப்பு 6343 மெட்ரிக் டன் உள்ளது. யூரியா 2898 மெட்ரிக் டன், டிஏபி 1460 மெட்ரிக் டன், பொட்டாஷ் 725 டன்னும் உள்ளது.

விவசாயிகளுக்கு இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி மூலம் 2155.69 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ்சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...