கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வீடு வாங்க இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோவை கோட்டத்தில் JnNURM திட்டத்தின் மூலம் வெள்ளலூர் திட்டப்பகுதியில் 2816 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் ஆட்சேபகராமான அரசு நிலங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்புதாரர்கள் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளான ஆத்துபாலம் அணைமேடு, அண்ணா நகர் பீளமேடு, ஆட்டோ டிரைவர் காலனி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி, கரும்புகடை ஆகிய குடிசைப்பகுதிகளில் கோவை மாநகராட்சி மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு சிலபேர் இடைத்தரகராக செயல்பட்டு வீடு வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஏமாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இடைத்தரகர்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோவை கோட்டத்தில் JnNURM திட்டத்தின் மூலம் வெள்ளலூர் திட்டப்பகுதியில் 2816 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் ஆட்சேபகராமான அரசு நிலங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்புதாரர்கள் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளான ஆத்துபாலம் அணைமேடு, அண்ணா நகர் பீளமேடு, ஆட்டோ டிரைவர் காலனி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி, கரும்புகடை ஆகிய குடிசைப்பகுதிகளில் கோவை மாநகராட்சி மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு சிலபேர் இடைத்தரகராக செயல்பட்டு வீடு வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஏமாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இடைத்தரகர்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.