கோவையில் குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வீடு வாங்க இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோவை கோட்டத்தில் JnNURM திட்டத்தின் மூலம் வெள்ளலூர் திட்டப்பகுதியில் 2816 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் ஆட்சேபகராமான அரசு நிலங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்புதாரர்கள் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளான ஆத்துபாலம் அணைமேடு, அண்ணா நகர் பீளமேடு, ஆட்டோ டிரைவர் காலனி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி, கரும்புகடை ஆகிய குடிசைப்பகுதிகளில் கோவை மாநகராட்சி மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு சிலபேர் இடைத்தரகராக செயல்பட்டு வீடு வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஏமாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இடைத்தரகர்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...