கோவையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் இருந்து மதுக்கரை நோக்கி கழிவு நீர் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. வண்டியை தியாகராஜன் (38) என்பவர் ஓட்டி வந்தார். எதிரே மணல் லாரி வந்தது. அந்த லாரியை பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் (38) என்பவர் இயக்கினார். இரண்டு லாரிகளிலும் கிளீனர்கள் உடனிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்களான தியாகராஜன், சந்திரகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலியே பலியாகினர். மேலும் இருவர், படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் இருந்து மதுக்கரை நோக்கி கழிவு நீர் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. வண்டியை தியாகராஜன் (38) என்பவர் ஓட்டி வந்தார். எதிரே மணல் லாரி வந்தது. அந்த லாரியை பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் (38) என்பவர் இயக்கினார். இரண்டு லாரிகளிலும் கிளீனர்கள் உடனிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்களான தியாகராஜன், சந்திரகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலியே பலியாகினர். மேலும் இருவர், படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.