நீலகிரி மாவட்டம் உதகை ஷில்பங்க் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் மாவட்ட ஆட்சியர் குரலில் பேசி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூறிக்கொண்டு பணம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பி1 காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தானம் (45) என்னும் நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பிரம்மநாயகம் என்பவரது மகன் சந்தானம் என்பதும், சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும் தெரியவந்தது. மேலும், இவரின் மீது மதுரை, திருப்பூர், நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
எந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கிறார்களோ அங்கு சென்று பிரபலமான இடங்களில் ஆட்சியர் போல பல குரல்களில் பேசி மோசடி செய்வதில் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாக மோசடியில் ஈடுபட்டுவந்த பலகுரல் மன்னன் சநதானம் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூறிக்கொண்டு பணம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பி1 காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தானம் (45) என்னும் நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பிரம்மநாயகம் என்பவரது மகன் சந்தானம் என்பதும், சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும் தெரியவந்தது. மேலும், இவரின் மீது மதுரை, திருப்பூர், நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
எந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கிறார்களோ அங்கு சென்று பிரபலமான இடங்களில் ஆட்சியர் போல பல குரல்களில் பேசி மோசடி செய்வதில் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாக மோசடியில் ஈடுபட்டுவந்த பலகுரல் மன்னன் சநதானம் கைது செய்யப்பட்டார்.