நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் போல் பேசி பணம் பறித்த பல குரல் மன்னன் கைது

நீலகிரி மாவட்டம் உதகை ஷில்பங்க் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் மாவட்ட ஆட்சியர் குரலில் பேசி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூறிக்கொண்டு பணம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பி1 காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தானம் (45) என்னும் நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பிரம்மநாயகம் என்பவரது மகன் சந்தானம் என்பதும், சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும் தெரியவந்தது. மேலும், இவரின் மீது மதுரை, திருப்பூர், நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

எந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கிறார்களோ அங்கு சென்று பிரபலமான இடங்களில் ஆட்சியர் போல பல குரல்களில் பேசி மோசடி செய்வதில் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாக மோசடியில் ஈடுபட்டுவந்த பலகுரல் மன்னன் சநதானம் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...