வேலை வாங்கித் தருவதாக மோசடி- காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார்

வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், ராம்நகர் பகுதியில் இயங்கிவரும் ஜெனிக் கம்யூனிகேசன் என்னும் தனியார் நிறுவனம் படித்த மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். 

அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாகியும் வேலை வாங்கித் தராமல் நிறுவனம் இழுத்தடித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேட்டதற்கு, பயிற்சிக்கு மட்டுமே தொகை வசூலிக்கப்பட்டதாகவும், வேலைஅளிக்கும் நிறுவனங்களில் தாங்களாகவே வேலை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் அலட்சியமாக ஜெனிக் கம்யூனிகேசன் நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ஜெனிக் கம்யூனிகேசன் நிறுவனத்தினர் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தனர். ஆனால் தற்போது வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளரிடம் முறையிட்டதற்காக, நாங்கள் இணைந்து உரிமையாளரை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் எங்களை மிரட்டி வருகிறார்.

எனவே, தங்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செலுத்திய பணத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மனு அளித்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...