கோவையில் இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுகெண்டிருந்த மென் பொறியாளரை வழிமறித்து அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொடிருந்துள்ளார். பாப்பம்பட்டி அருகே இவர் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி தாமோதரனிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு அவரை கட்டி போட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து தாமோதரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியாக சென்ற நபரை வழி மறித்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.