கோவையில் ஐடி ஊழியரை வழிமறித்து பணம், வாகனம் திருடிய மர்ம கும்பல்



கோவையில் இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுகெண்டிருந்த மென் பொறியாளரை வழிமறித்து அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொடிருந்துள்ளார். பாப்பம்பட்டி அருகே இவர் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி தாமோதரனிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு அவரை கட்டி போட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தாமோதரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியாக சென்ற நபரை வழி மறித்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...