கோவையில் ஐடி ஊழியரை வழிமறித்து பணம், வாகனம் திருடிய மர்ம கும்பல்



கோவையில் இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுகெண்டிருந்த மென் பொறியாளரை வழிமறித்து அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொடிருந்துள்ளார். பாப்பம்பட்டி அருகே இவர் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி தாமோதரனிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு அவரை கட்டி போட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தாமோதரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியாக சென்ற நபரை வழி மறித்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...