காட்டு நாய்களால் வேட்டையாடப்பட்ட மான்- இறைச்சியை கைப்பற்றிய வேட்டையர்கள் கைது

கோவை மாவட்டம், மாங்கரை அடுத்துள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான மான்கள், யானைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் காட்டு நாய்கள் ஒரு சாம்பார் மானை வேட்டையாடியுள்ளன. அதனைக் கண்ட மூன்று வனவிலங்கு வேட்டையர்கள் காட்டு நாய்களை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மூன்று வேட்டையர்களையும் மான் இறைச்சியுடன் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வேட்டையில் ஈடுபட்டது மாங்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன், என்.முருகன் மற்றும் பி.ரமேஷ் என்பதும், காட்டுநாய்களால் வேட்டையாடப்பட்ட சாம்பார் மானின் இறைச்சியை வெட்டி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இதில் ஈடுபட்டோர் மீது வனபாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...