கோவை மாவட்டம், மாங்கரை அடுத்துள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான மான்கள், யானைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் காட்டு நாய்கள் ஒரு சாம்பார் மானை வேட்டையாடியுள்ளன. அதனைக் கண்ட மூன்று வனவிலங்கு வேட்டையர்கள் காட்டு நாய்களை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மூன்று வேட்டையர்களையும் மான் இறைச்சியுடன் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வேட்டையில் ஈடுபட்டது மாங்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன், என்.முருகன் மற்றும் பி.ரமேஷ் என்பதும், காட்டுநாய்களால் வேட்டையாடப்பட்ட சாம்பார் மானின் இறைச்சியை வெட்டி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, இதில் ஈடுபட்டோர் மீது வனபாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் காட்டு நாய்கள் ஒரு சாம்பார் மானை வேட்டையாடியுள்ளன. அதனைக் கண்ட மூன்று வனவிலங்கு வேட்டையர்கள் காட்டு நாய்களை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மூன்று வேட்டையர்களையும் மான் இறைச்சியுடன் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வேட்டையில் ஈடுபட்டது மாங்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன், என்.முருகன் மற்றும் பி.ரமேஷ் என்பதும், காட்டுநாய்களால் வேட்டையாடப்பட்ட சாம்பார் மானின் இறைச்சியை வெட்டி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, இதில் ஈடுபட்டோர் மீது வனபாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.