தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலாவின் கையில் வசமடைந்தது. அதில் வெறுப்படைந்த அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்தார். தொடர்ந்து, சசிகலாவின் தலைமையில் அணிதிரன்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எடப்பாடி.பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்படும் என பலதரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையிலும் இரு அணிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்களே தொடர்ந்து நிலவி வந்தது.
இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நேற்று (ஆகஸ்ட் 22) அதிமுக-வின் இரு அணிகளும் ஒருமனதாக இணைந்தன.
தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், நிதித்துறை பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அணிகள் இணைப்பிற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னம்மாவாகிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முன்மொழியப்பட்டது. நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்படும் என பலதரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையிலும் இரு அணிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்களே தொடர்ந்து நிலவி வந்தது.
இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நேற்று (ஆகஸ்ட் 22) அதிமுக-வின் இரு அணிகளும் ஒருமனதாக இணைந்தன.
தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், நிதித்துறை பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அணிகள் இணைப்பிற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னம்மாவாகிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முன்மொழியப்பட்டது. நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.