இணைந்த ஒருதாய் குழந்தைகள் - நீக்கப்பட்ட சின்னம்மா !

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலாவின் கையில் வசமடைந்தது. அதில் வெறுப்படைந்த அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்தார். தொடர்ந்து, சசிகலாவின் தலைமையில் அணிதிரன்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எடப்பாடி.பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்படும் என பலதரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையிலும் இரு அணிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்களே தொடர்ந்து நிலவி வந்தது.

இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நேற்று (ஆகஸ்ட் 22) அதிமுக-வின் இரு அணிகளும் ஒருமனதாக இணைந்தன. 

தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், நிதித்துறை பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அணிகள் இணைப்பிற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னம்மாவாகிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முன்மொழியப்பட்டது. நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...