பொதுவாக மருத்துவத் துறையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதில் பெரிதும் இடர்பாடாக இருப்பது ஒரு பகுதியில் இருந்து உடல் உறுப்பை வேறு பகுதிக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்துவதே. உடலில் இருந்து பிரிக்கப்பட்ட உடல் பாகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் நோயாளியின் உடலில் பொருத்தப்பட வேண்டும். இதில் நேரத்தினை சரியான முறையில் கடைபிடிப்பது என்பது சிரமமாகவே மருத்துவத் துறையில் இருந்து வருகிறது. அவ்வாறான தருணங்களில் தற்போது கங்கா மருத்துவமனையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஏர் ஆம்புலன்ஸ்" சேவை பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது.
அவ்வாறான ஒரு சம்பவமே சமீபத்தில நடைபெற்றுள்ளது. சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய நோயால் தனது இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த 28 வயது இளைஞருக்கு வேலூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் குறிப்பிட்ட நேரத்தில் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு அந்த இளைஞருக்கு மறுபிறவி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்தில் இதயம் எடுத்தச் செல்லப்பட்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் கங்கா ஏர் ஆம்புலன்ஸ், விஐடீ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிஎம்சி வேலூர், சென்னை சன்மார் குழு, குளோபல் மருத்துவமனை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர், வேலூர் காவல் துறை, காரப்பாக்கம் காவல்துறை குழு மற்றும் சென்னை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பலர் தங்களது சீறிய பணியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறான ஒரு சம்பவமே சமீபத்தில நடைபெற்றுள்ளது. சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய நோயால் தனது இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த 28 வயது இளைஞருக்கு வேலூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் குறிப்பிட்ட நேரத்தில் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு அந்த இளைஞருக்கு மறுபிறவி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்தில் இதயம் எடுத்தச் செல்லப்பட்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் கங்கா ஏர் ஆம்புலன்ஸ், விஐடீ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிஎம்சி வேலூர், சென்னை சன்மார் குழு, குளோபல் மருத்துவமனை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர், வேலூர் காவல் துறை, காரப்பாக்கம் காவல்துறை குழு மற்றும் சென்னை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பலர் தங்களது சீறிய பணியினை வெளிப்படுத்தியுள்ளனர்.