கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவைக்குட்பட்ட 5 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.47 ஏக்கர் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.33, காளப்பட்டி, அசோகா நகரில் 23.43 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வடவள்ளி, வார்டு எண்.16, ஜி.பி.கார்டன் பகுதியில் உள்ள 13.68 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளக்கிணர், வார்டு எண்.43 அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 75.70 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர், வார்டு எண்.87 பாரதிநகர் பகுதியில் உள்ள 6 சென்ட் பரப்பும் மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட கணபதி, வார்டு எண்.48 செல்வ குமாரசாமி நகர் பகுதியில் உள்ள 28.02 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 1.47 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் மீட்க்கப்பட்டு, சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.33, காளப்பட்டி, அசோகா நகரில் 23.43 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வடவள்ளி, வார்டு எண்.16, ஜி.பி.கார்டன் பகுதியில் உள்ள 13.68 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளக்கிணர், வார்டு எண்.43 அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 75.70 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர், வார்டு எண்.87 பாரதிநகர் பகுதியில் உள்ள 6 சென்ட் பரப்பும் மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட கணபதி, வார்டு எண்.48 செல்வ குமாரசாமி நகர் பகுதியில் உள்ள 28.02 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 1.47 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் மீட்க்கப்பட்டு, சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.