அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு- சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுகவினரும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம், சுந்தராபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு 8 மாத மனக்குமறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.

ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லம் என்பது அதிமுக-வினருக்கு கோவில் போன்றது. இதனை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கி இருப்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் சொத்துக்களை உரிமை கொண்டாட தனிமனிதர்களுக்கு உரிமை கிடையாது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுக-வினரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இவ்வாறு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...