அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுகவினரும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.
கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம், சுந்தராபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு 8 மாத மனக்குமறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.
ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லம் என்பது அதிமுக-வினருக்கு கோவில் போன்றது. இதனை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கி இருப்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் சொத்துக்களை உரிமை கொண்டாட தனிமனிதர்களுக்கு உரிமை கிடையாது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுக-வினரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இவ்வாறு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம் தெரிவித்தார்.
கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம், சுந்தராபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு 8 மாத மனக்குமறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.
ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லம் என்பது அதிமுக-வினருக்கு கோவில் போன்றது. இதனை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கி இருப்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் சொத்துக்களை உரிமை கொண்டாட தனிமனிதர்களுக்கு உரிமை கிடையாது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுக-வினரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இவ்வாறு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம் தெரிவித்தார்.