தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான 2017- 18 ஆம் ஆண்டிற்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் 2017 முதல் ஜூலை 2017 வரை நடைபெற்று வந்தது.
நாளது வரை நேர்காணலுக்கு வராத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்திற்கு வந்து தங்களின் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நேர்காணலுக்கு வராதவர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் 2017 மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாளது வரை நேர்காணலுக்கு வராத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்திற்கு வந்து தங்களின் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நேர்காணலுக்கு வராதவர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் 2017 மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.