விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆலோசனை


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலங்களின் போதும் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். சிலை வைக்கும் அமைப்பினர் உரிய காவல்துறை அனுமதி பெற்று 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்துள்ள கரையக்கூடிய சாயத்தை மட்டுமே பூசி இருக்க வேண்டும். காகிதக்கூழ் மற்றும் களி மண்ணால் ஆன சிலைகள் வைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்களில் சிலை செய்து வைத்து விற்பனை செய்ய கூடாது. இதை கண்காணித்து தேவையான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் பேசுதல் கூடாது. ஊர்வலங்கள் செல்லும் போது ஒலி எழுப்புவதோ, மேளங்கள் அடிப்பதோ, கோஷங்கள் போடுவதோ கூடாது. ஊர்வலத்தில் தடி,கம்பு மற்றும் ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது. பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்க கூடாது. சிலைகள் கரைக்கப்படும் குளங்களில் போதிய வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்க மின்வாரியமும், மாநகராட்சியும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள்; 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் ஒரு சிறு சம்பவங்கள் கூட இல்லாத வகையில் இந்த விழா நடைபெற அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...