நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை சாலையிலேயே நிறுவ வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம்


சென்னை கடற்கரை சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவ சிலையை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகக் கூறி தமிழக அரசு நள்ளிரவில் அகற்றியது. இது சிவாஜி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதனைத்தொடர்ந்து, சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை காமராஜர் சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவே அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கோவை மாநகரில், அனைத்து    சிவாஜி கணேசன் ரசிகர் அமைப்புகள் சார்பில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் தலைவரும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் ஒருநாள் அடையாள கோரிக்கை உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பால் மக்களை கவர்ந்தவர்.  கலைத்துறை மூலம் தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பெற்றவர் என்பதால் அவரை சினிமா துறையை சார்ந்தவர் என்று மட்டும் பாராமல் அவருடைய சிலையை கடற்கரை சாலையில் அமைக்கபடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள், மணிமண்டபத்தில் வேண்டுமானால் புது சிலை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அகற்றபட்ட சிலையை அது இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...