ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த தடியடி தொடர்பான விசாரணை முடிவடைய 7 மாதங்கள் ஆகும் - ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்



தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது.

இந்த சட்டம் கொண்டு வந்தும் மாணவர்கள் போராட்டம் நீடித்தது. தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி காலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மாணவர்கள் மீது நடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) கோவைக்கு வந்த விசாரணை கமிஷன் தலைவர் ராஜேஸ்வரன் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

சென்னை மெரினா கடற்கரை, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பொதுமக்களை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்தது. 

கடந்த ஜனவரி 1-ம் தேதி மூன்று மாத காலக்கெடுவுக்குள் விசாரணை முடிக்க ஆணை கிடைத்தது. ஆனால், விசாரணை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் விசாரணை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கலவரம் தொடர்பாக 1949 பேர் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவையில் 51 பேரிடம் விசாரணை நடைபெற உள்ளது. 

இந்த 51 பேரில் 29 பேர் போலீசாருக்கு ஆதரவாக பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 15 பேர் போலீசாருக்கு எதிராகவும், 7 போலீசாரும் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விசாரணை முடித்த பின்னர் மீண்டும் அடுத்த கட்டமாக மீதமுள்ள 31 பேரிடம் விசாரணை நடைபெறும். 

சென்னையில் ஆட்டோக்கள் மற்றும் குடிசைகள் கொளுத்தப்பட்ட புகாரில் பலர் போலீசாருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தப்படும்.



விசாரணை கமிஷன் எந்த அதிகாரிகளை அழைத்தாலும் அவர் உடனடியாக வர வேண்டும். இந்த விசாரணை முழுவதுமாக  முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...