ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த தடியடி தொடர்பான விசாரணை முடிவடைய 7 மாதங்கள் ஆகும் - ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்



தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது.

இந்த சட்டம் கொண்டு வந்தும் மாணவர்கள் போராட்டம் நீடித்தது. தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி காலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மாணவர்கள் மீது நடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) கோவைக்கு வந்த விசாரணை கமிஷன் தலைவர் ராஜேஸ்வரன் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

சென்னை மெரினா கடற்கரை, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பொதுமக்களை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்தது. 

கடந்த ஜனவரி 1-ம் தேதி மூன்று மாத காலக்கெடுவுக்குள் விசாரணை முடிக்க ஆணை கிடைத்தது. ஆனால், விசாரணை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் விசாரணை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கலவரம் தொடர்பாக 1949 பேர் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவையில் 51 பேரிடம் விசாரணை நடைபெற உள்ளது. 

இந்த 51 பேரில் 29 பேர் போலீசாருக்கு ஆதரவாக பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 15 பேர் போலீசாருக்கு எதிராகவும், 7 போலீசாரும் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விசாரணை முடித்த பின்னர் மீண்டும் அடுத்த கட்டமாக மீதமுள்ள 31 பேரிடம் விசாரணை நடைபெறும். 

சென்னையில் ஆட்டோக்கள் மற்றும் குடிசைகள் கொளுத்தப்பட்ட புகாரில் பலர் போலீசாருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தப்படும்.



விசாரணை கமிஷன் எந்த அதிகாரிகளை அழைத்தாலும் அவர் உடனடியாக வர வேண்டும். இந்த விசாரணை முழுவதுமாக  முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...