கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்குதல், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் அச்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்று இருப்பதாகவும், இப்போராட்டம் காரணமாக கிராமப்பகுதிகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் தபால் பட்டுவாடா பணிகள் முடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் அச்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்று இருப்பதாகவும், இப்போராட்டம் காரணமாக கிராமப்பகுதிகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் தபால் பட்டுவாடா பணிகள் முடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.