ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) 112 அடி ஆதி யோகியின் அருகாமையில் உள்ள மலை வாசலின் முன் கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகள், பெரியவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் கிட்டுசாமி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.

தொடர்ந்து, இந்த விழாவில் சத்குரு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தி:-
"சுதந்திரம் அடைந்தது முதல் நம் பாரத திருநாட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் வியாபாரத்துறை வளர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. நமது விஞ்ஞானமும் குறிப்பிடத்தக்க வளர்ச்ச்சியடைந்துள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.
இவையனைத்தையும் விட குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமது விவசாயிகள் குறைந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்டே விவசாயம் பற்றிய தங்கள் பாரம்பரிய அறிவு, அனுபவம், மற்றும் திறமைகளை வைத்து 100 கோடிகும் அதிகமான மக்களுக்கு உணவளித்து வந்துள்ளார்கள். ஆனால் நம் நீர் மற்றும் நிலத்தின் வழங்கள் குறைந்து கொண்டு இருப்பது நம் விவசாயிகளின் வாழ்க்கையை கடினமாக ஆக்கி உள்ளது.
இந்த சுதந்திர நன்னாளில், நாம் அனைவரும் நம் தேசத்தின் நதிகளை காக்க, நம் தேசத்தின் நீர் மற்றும் நிலத்தை (மண் வளத்தை) காக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்".

இந்நிகழ்ச்சியில், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் கிட்டுசாமி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.

தொடர்ந்து, இந்த விழாவில் சத்குரு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தி:-
"சுதந்திரம் அடைந்தது முதல் நம் பாரத திருநாட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் வியாபாரத்துறை வளர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. நமது விஞ்ஞானமும் குறிப்பிடத்தக்க வளர்ச்ச்சியடைந்துள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.
இவையனைத்தையும் விட குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமது விவசாயிகள் குறைந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்டே விவசாயம் பற்றிய தங்கள் பாரம்பரிய அறிவு, அனுபவம், மற்றும் திறமைகளை வைத்து 100 கோடிகும் அதிகமான மக்களுக்கு உணவளித்து வந்துள்ளார்கள். ஆனால் நம் நீர் மற்றும் நிலத்தின் வழங்கள் குறைந்து கொண்டு இருப்பது நம் விவசாயிகளின் வாழ்க்கையை கடினமாக ஆக்கி உள்ளது.
இந்த சுதந்திர நன்னாளில், நாம் அனைவரும் நம் தேசத்தின் நதிகளை காக்க, நம் தேசத்தின் நீர் மற்றும் நிலத்தை (மண் வளத்தை) காக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்".