ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) 112 அடி ஆதி யோகியின் அருகாமையில் உள்ள மலை வாசலின் முன் கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகள், பெரியவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் கிட்டுசாமி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.



தொடர்ந்து, இந்த விழாவில் சத்குரு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தி:-

"சுதந்திரம் அடைந்தது முதல்  நம் பாரத திருநாட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் வியாபாரத்துறை வளர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. நமது விஞ்ஞானமும் குறிப்பிடத்தக்க வளர்ச்ச்சியடைந்துள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

இவையனைத்தையும் விட குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமது விவசாயிகள் குறைந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்டே  விவசாயம் பற்றிய தங்கள் பாரம்பரிய அறிவு, அனுபவம், மற்றும் திறமைகளை வைத்து 100 கோடிகும் அதிகமான  மக்களுக்கு உணவளித்து வந்துள்ளார்கள். ஆனால் நம் நீர் மற்றும் நிலத்தின் வழங்கள் குறைந்து கொண்டு இருப்பது  நம் விவசாயிகளின் வாழ்க்கையை கடினமாக ஆக்கி உள்ளது.

இந்த சுதந்திர நன்னாளில், நாம் அனைவரும் நம் தேசத்தின்  நதிகளை காக்க, நம் தேசத்தின் நீர் மற்றும் நிலத்தை (மண் வளத்தை) காக்க  உறுதி எடுத்துக்  கொள்ள வேண்டும். 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்".

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...