கோவை சௌரிபாளையத்தில் சாலையில் வழிந்தோடும் நீரில் துணி துவைக்கும் முதியவர்



கோவைக்கு என்று தனியே பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் சமீபகாலமாக, குண்டும் குழியுமான சாலைகள் கோவையின் மிக முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. 

பாதாள சாக்கடைப் பணிகள், தொலைபேசி இணைப்பு பதிக்கும் பணிகள் என்று பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மீண்டும் மீண்டும் தோண்டுவது மட்டுமில்லாமல் அவற்றை சரிவர மூடாதது, தரமற்ற சாலைகள் இடுவது போன்ற செயல்களால் அந்த சாலைகள் பழுதாகி பெரிய பள்ளங்களை உருவாக்கி விடுகின்றன. 

மழை பெய்ந்து ஓய்ந்த பின்பு, இந்த குழிகளில் மழை மற்றும் கழிவு நீர் பல நாட்கள் தேங்கி விடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதை நிரூபிக்கும் விதமாக, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து சவுரிபாளையம் நோக்கி செல்லும் வழியில் தான் இந்த வினோதத்தை காண முடிந்தது. 

இந்த சாலையில் பல நாட்களாக உள்ள சாலை குழி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீரை கசிய விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்ட இந்த சாலையில், இன்று காலை முதியவர் ஒருவர் தனது ஆடைகளை துவைக்க தொடங்கிவிட்டார். 



சரியான மின் விளக்கு வசதி இல்லாதமையால் இரவு நேரங்களில் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும் வாடிக்கையாகி போய்விட்டது. 

உடைந்த குழாய் நீரினால் ஆடைகளை துவைக்கும் இவர், அவற்றை உலர்த்த மின்சாரமற்ற கம்பிகளை நாடுவாரோ என்னவோ??

இன்றும், கோவையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் பற்றாகுறை தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில்,  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று குடிநீர் குழாய்கள் உடைந்து 24 மணி நேரமும் நீர் வீணாய் போவது மாநகராட்சியின் அலட்சிய போக்கையே  காட்டுகிறது.

மக்களிடம்  நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் மாநகராட்சியே இது போன்று பிரச்சனைகளை உடனடியாக கவனிக்காமல் இருப்பது "அறிவுரை எல்லாம் மக்களுக்கு தான், எங்களுக்கு இல்லை" என்று கூறுவது போல் உள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...