கோவை சௌரிபாளையத்தில் சாலையில் வழிந்தோடும் நீரில் துணி துவைக்கும் முதியவர்



கோவைக்கு என்று தனியே பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் சமீபகாலமாக, குண்டும் குழியுமான சாலைகள் கோவையின் மிக முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. 

பாதாள சாக்கடைப் பணிகள், தொலைபேசி இணைப்பு பதிக்கும் பணிகள் என்று பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மீண்டும் மீண்டும் தோண்டுவது மட்டுமில்லாமல் அவற்றை சரிவர மூடாதது, தரமற்ற சாலைகள் இடுவது போன்ற செயல்களால் அந்த சாலைகள் பழுதாகி பெரிய பள்ளங்களை உருவாக்கி விடுகின்றன. 

மழை பெய்ந்து ஓய்ந்த பின்பு, இந்த குழிகளில் மழை மற்றும் கழிவு நீர் பல நாட்கள் தேங்கி விடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதை நிரூபிக்கும் விதமாக, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து சவுரிபாளையம் நோக்கி செல்லும் வழியில் தான் இந்த வினோதத்தை காண முடிந்தது. 

இந்த சாலையில் பல நாட்களாக உள்ள சாலை குழி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீரை கசிய விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்ட இந்த சாலையில், இன்று காலை முதியவர் ஒருவர் தனது ஆடைகளை துவைக்க தொடங்கிவிட்டார். 



சரியான மின் விளக்கு வசதி இல்லாதமையால் இரவு நேரங்களில் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும் வாடிக்கையாகி போய்விட்டது. 

உடைந்த குழாய் நீரினால் ஆடைகளை துவைக்கும் இவர், அவற்றை உலர்த்த மின்சாரமற்ற கம்பிகளை நாடுவாரோ என்னவோ??

இன்றும், கோவையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் பற்றாகுறை தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில்,  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று குடிநீர் குழாய்கள் உடைந்து 24 மணி நேரமும் நீர் வீணாய் போவது மாநகராட்சியின் அலட்சிய போக்கையே  காட்டுகிறது.

மக்களிடம்  நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் மாநகராட்சியே இது போன்று பிரச்சனைகளை உடனடியாக கவனிக்காமல் இருப்பது "அறிவுரை எல்லாம் மக்களுக்கு தான், எங்களுக்கு இல்லை" என்று கூறுவது போல் உள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...