உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கததால், அந்நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த ஆக்சிஜனை நிறுத்தியது. இதனால் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலைaயில் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன்
தமிழகத்தில் மருத்துவ படிப்பு தரமில்லை என பாஜகவினர் கூறி வரும் நிலையில்,பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததாலேயே குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.