உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் அஞ்சலி


உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கததால், அந்நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த ஆக்சிஜனை நிறுத்தியது. இதனால் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலைaயில் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அஞ்சலி  செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு தரமில்லை என பாஜகவினர் கூறி வரும் நிலையில்,பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததாலேயே குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...