தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு தரமற்ற குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளது.
ஊழல் முறைகேடுகளுக்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 29-ம் தேதி கருப்புப்பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் நடத்தும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30 ஆயிரம் பேர் பங்கேற்பர்.
இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு தரமற்ற குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளது.
ஊழல் முறைகேடுகளுக்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 29-ம் தேதி கருப்புப்பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் நடத்தும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30 ஆயிரம் பேர் பங்கேற்பர்.
இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.