தமிழக ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு தரமற்ற குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளது. 

ஊழல் முறைகேடுகளுக்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 29-ம் தேதி கருப்புப்பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் நடத்தும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30 ஆயிரம் பேர் பங்கேற்பர்.

இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...