சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி

வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் 271 தியாகிகளின் புகைப்படங்கள் உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சிகள் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்கு திருக்குறள் மாமன்றம் மற்றும் மூத்த தொழிநுட்ப அலுவலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.



இது குறித்து வ.உ.சி சேவா அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து கூறுகையில், மூன்றுநாள் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் அரியவகை புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புகைப்படங்கள் இணையதளங்களில் எளிதில் கிடைப்பதில்லை. திருப்பூர் மற்றும் கோயமுத்தூரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளை தேடி இவ்வகை புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளோம். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பார்வையிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.



இதில் வ.உ.சி சேவா அறக்கட்டளை துணைத் தலைவர் ஆனந்த், செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் வ.உ.சி சேவா அறக்கட்டளை முக்கிய செயற்குழு உருப்பினர்கள் மற்றும் கிராமிய கலைகள் ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், ஈர நெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...