சோமனூர் வாய்க்கால் பாளையம் பகுதியில் விசைத்தறி நடத்தி வந்த குமாரசாமி என்பவரும் அவரது மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலையைக் கண்டித்தும், ஜவுளி சந்தை உருவாக்குதல், விசைத்தறி உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பவர் ஹவுஸ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளிடையே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


இந்த படுகொலையைக் கண்டித்தும், ஜவுளி சந்தை உருவாக்குதல், விசைத்தறி உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பவர் ஹவுஸ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளிடையே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
