கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் எர்ணாகுளம் சென்றுகொண்டிருந்தார்.

அவரது கார் இன்று அதிகாலை கோவை மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

உடனடியாக திலீப் குமாரின் மனைவி ஆஷா மற்றும் குழந்தைகள், மகன் நித்தூஸ், மகள் குல் காரில் இருந்து இறங்கினர்.
ஆனால், தீலிப்குமார் சீட்பெட் அணிந்திருந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதில் அவர் காரினுள்ளேயே உடல் கருகி பலியானார்.

இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் திலீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓடும் காரில் தீப்பிடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.