ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் பலி


கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் எர்ணாகுளம் சென்றுகொண்டிருந்தார்.



அவரது கார் இன்று அதிகாலை கோவை மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது.



உடனடியாக திலீப் குமாரின் மனைவி ஆஷா மற்றும் குழந்தைகள், மகன் நித்தூஸ், மகள் குல் காரில் இருந்து இறங்கினர். 

ஆனால், தீலிப்குமார் சீட்பெட் அணிந்திருந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதில் அவர் காரினுள்ளேயே உடல் கருகி பலியானார்.



இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் திலீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் காரில் தீப்பிடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...