தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு சிறப்பான முறையில் உலக தேனீ தினம் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகை தேன், தேனீ பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் தரும் வகையில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சிகள் வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை நடை பெறவிருக்கும் இவ்விழாவில், பங்கேற்க விவசாயிகளும் பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.
மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சிகள் வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை நடை பெறவிருக்கும் இவ்விழாவில், பங்கேற்க விவசாயிகளும் பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.