கோவை- பெங்களூர் இடையே ‘டபுள் டக்கர்' உதய் ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோவையில் துவக்கம்


இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை அடுத்த மாதம் கோவை மற்றும் பெங்களூரு இடையே இயக்கபடும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா சென்ற வாரம் கோவை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த மாதம் கோவை வருகையின் போது இதனை உறுதிசெய்தார். தற்போது, இதற்கான நடவடிக்கை முழுவீச்சில் வேகமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் முதல் முறையில் இயக்கப்பட்டது. தற்போது கோவை - பெங்களூர் இடையே இரவு நேர பயணத்துக்காக இந்த ரயில் கோவையில் இயக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, சோதனை ஓட்டம் நடத்துவதற்காக இன்று சென்னையில் இருந்து இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் மூன்று பெட்டிகளுடன் ஜோலர்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 12 மணியளவில் வந்தடைந்தது. இதனை கோவை ரயில்வே மேலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.



இது குறித்து, கோவை ரயில்வே துறை மேலாளர் சின்னராஜு கூறுகையில், இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) ‘உதய்’ ரயில் கோவை - பெங்களூர் இடையே இயக்குவதற்காக சென்னையில் இருந்து மூன்று பெட்டிகளுடன் கோவைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணராயபுரம், பெங்களூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலின் உயரம் 4.36 மீட்டர் கொண்டதால், இந்த ரயில் இயக்கும் வழித்தடத்தில் வேலைப் பணிகள் தற்போது முடிந்துள்ளது. இதன் அகலம் சாதாரண ராயிலைப் போன்றே 3.05 மீட்டர் கொண்டுள்ளது. இதற்கான 10 இணைப் பெட்டிகள் விரைவில் கொண்டுவரப்படும். அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி உள்ளதால் ஜெனரேட்டர் வசதிக்கென தனிப் பெட்டிகள் இதில் இருக்கும்.



இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதியுடன் நவீன வடிவமைப்பில் உள்ளது. இதில் பயோ-கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் தற்போது சோதனை ஓட்டத்தின் போது 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...