கோவை- பெங்களூர் இடையே ‘டபுள் டக்கர்' உதய் ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோவையில் துவக்கம்


இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை அடுத்த மாதம் கோவை மற்றும் பெங்களூரு இடையே இயக்கபடும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா சென்ற வாரம் கோவை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த மாதம் கோவை வருகையின் போது இதனை உறுதிசெய்தார். தற்போது, இதற்கான நடவடிக்கை முழுவீச்சில் வேகமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் முதல் முறையில் இயக்கப்பட்டது. தற்போது கோவை - பெங்களூர் இடையே இரவு நேர பயணத்துக்காக இந்த ரயில் கோவையில் இயக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, சோதனை ஓட்டம் நடத்துவதற்காக இன்று சென்னையில் இருந்து இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் மூன்று பெட்டிகளுடன் ஜோலர்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 12 மணியளவில் வந்தடைந்தது. இதனை கோவை ரயில்வே மேலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.



இது குறித்து, கோவை ரயில்வே துறை மேலாளர் சின்னராஜு கூறுகையில், இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) ‘உதய்’ ரயில் கோவை - பெங்களூர் இடையே இயக்குவதற்காக சென்னையில் இருந்து மூன்று பெட்டிகளுடன் கோவைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணராயபுரம், பெங்களூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலின் உயரம் 4.36 மீட்டர் கொண்டதால், இந்த ரயில் இயக்கும் வழித்தடத்தில் வேலைப் பணிகள் தற்போது முடிந்துள்ளது. இதன் அகலம் சாதாரண ராயிலைப் போன்றே 3.05 மீட்டர் கொண்டுள்ளது. இதற்கான 10 இணைப் பெட்டிகள் விரைவில் கொண்டுவரப்படும். அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி உள்ளதால் ஜெனரேட்டர் வசதிக்கென தனிப் பெட்டிகள் இதில் இருக்கும்.



இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதியுடன் நவீன வடிவமைப்பில் உள்ளது. இதில் பயோ-கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் தற்போது சோதனை ஓட்டத்தின் போது 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...