கோவை- பெங்களூர் இடையே ‘டபுள் டக்கர்' உதய் ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோவையில் துவக்கம்


இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை அடுத்த மாதம் கோவை மற்றும் பெங்களூரு இடையே இயக்கபடும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா சென்ற வாரம் கோவை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த மாதம் கோவை வருகையின் போது இதனை உறுதிசெய்தார். தற்போது, இதற்கான நடவடிக்கை முழுவீச்சில் வேகமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் முதல் முறையில் இயக்கப்பட்டது. தற்போது கோவை - பெங்களூர் இடையே இரவு நேர பயணத்துக்காக இந்த ரயில் கோவையில் இயக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, சோதனை ஓட்டம் நடத்துவதற்காக இன்று சென்னையில் இருந்து இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் மூன்று பெட்டிகளுடன் ஜோலர்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 12 மணியளவில் வந்தடைந்தது. இதனை கோவை ரயில்வே மேலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.



இது குறித்து, கோவை ரயில்வே துறை மேலாளர் சின்னராஜு கூறுகையில், இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) ‘உதய்’ ரயில் கோவை - பெங்களூர் இடையே இயக்குவதற்காக சென்னையில் இருந்து மூன்று பெட்டிகளுடன் கோவைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணராயபுரம், பெங்களூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலின் உயரம் 4.36 மீட்டர் கொண்டதால், இந்த ரயில் இயக்கும் வழித்தடத்தில் வேலைப் பணிகள் தற்போது முடிந்துள்ளது. இதன் அகலம் சாதாரண ராயிலைப் போன்றே 3.05 மீட்டர் கொண்டுள்ளது. இதற்கான 10 இணைப் பெட்டிகள் விரைவில் கொண்டுவரப்படும். அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி உள்ளதால் ஜெனரேட்டர் வசதிக்கென தனிப் பெட்டிகள் இதில் இருக்கும்.



இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதியுடன் நவீன வடிவமைப்பில் உள்ளது. இதில் பயோ-கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் தற்போது சோதனை ஓட்டத்தின் போது 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...