அறுவை சிகிச்சையில் திறமை அவசியம்- அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் அரசு மருத்துவமனை டீன் பேச்சு

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் துவங்கியது.

இதன் முதல் நாள் அமர்வில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் காணொளிக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், அந்த அறு சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர். முன்னதாக இந்த காணொளிக்காட்சி நிகழ்ச்சி மற்றும் மாநாட்டினை கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் துவக்கி வைத்து உரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், தற்போதுள்ள தொழில்நுட்ப மேன்மையடைந்த காலகட்டத்தில் அறுவை சிகிச்சைகள் குறித்து சமூகவளைதலங்களில் அதிகமாக காணொளிக்காட்சிகள் பகிரப்படுகின்றன. ஆனால், அதுகுறித்தான நம் சந்தேகங்களை நாம் அறிய முடிவதில்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலமாகவே அறுவை சிகிச்சைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 



நமது பாரம்பரியத்தின்படி வேதகாலத்தில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவம் துவங்கி விட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை 600 ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருதா என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு திறமை மிகவும் அவசியம். அது இதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பதன் மூலமே அதிகரிக்கும்".

இவ்வாறு கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் பேசினார்.

இந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும், கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...