கோவை- மும்பை செல்லும் விமானம் தாமதம்- பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு

கோவையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம் குறித்த நேரத்தில் கிளம்பாததால் அவதியடைந்த பயணிகள் கோவை விமான நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் இருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் கிளம்பவில்லை. விமானம் கிளம்புவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், மும்பை செல்வதற்கான மாற்று ஏற்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்காததால், பயணிகள் விமான நிலையத்திற்குள் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி வலியுறுத்திய பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இரவு 7 மணிக்கு வேறு விமானம் மூலம் மும்பை செல்வதற்காக மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...