கோவையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம் குறித்த நேரத்தில் கிளம்பாததால் அவதியடைந்த பயணிகள் கோவை விமான நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் கிளம்பவில்லை. விமானம் கிளம்புவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், மும்பை செல்வதற்கான மாற்று ஏற்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்காததால், பயணிகள் விமான நிலையத்திற்குள் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி வலியுறுத்திய பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இரவு 7 மணிக்கு வேறு விமானம் மூலம் மும்பை செல்வதற்காக மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவையில் இருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் கிளம்பவில்லை. விமானம் கிளம்புவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், மும்பை செல்வதற்கான மாற்று ஏற்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்காததால், பயணிகள் விமான நிலையத்திற்குள் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி வலியுறுத்திய பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இரவு 7 மணிக்கு வேறு விமானம் மூலம் மும்பை செல்வதற்காக மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.