தமிழக அரசு சார்பில் விரைவில் இலவச "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்"



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மையமாக்கப்படுவதைத் தொடர்ந்து விரைவில் பொது மக்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:-

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பு செய்வதை தவிர்க்கவும். மேலும், சமீப காலமாக ஒரு சில உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமை பெற்றுக்கொண்டு அரசு கேபிள் இணைப்பை துண்டித்தும், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும், தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெறுவதற்கு ஒவ்வொரு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அவர்களது செட்டாப் பாக்ஸ் தேவைகளை வலைதளத்தில் www.tactv.in உள்நுழைவு (Login) செய்து CAF படிவத்தை தேர்வு செய்து அதில் சந்தாதாரர்களின் விவரங்கள், அதாவது பெயர், ஆதார் எண், பாலினம், மின் அஞ்சல், கைபேசி எண், பிறந்த தேதி, முகவரி, எஸ்டி செட்டாப் பாக்ஸ், எச்டி செட்டாப் பாக்ஸ் வீட்டு உபயோகத்திற்காகவா அல்லது வணிக பயன்பாட்டிற்காகவா போன்ற தகவல்கள் வரும் 2017 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...