கோவையில் கடந்த ஒரு மாதமாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த மாதம் 50-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலர் உயிரும் இழந்தனர்.
இந்த நிலையில், டெங்கு தொற்றுக்கு ஆளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் இன்று பலியாகியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (68). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் கடந்த இரண்டு மாதங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது கோவை மக்களை பீதியடையச் செய்துள்ளது.
இந்த நிலையில், டெங்கு தொற்றுக்கு ஆளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் இன்று பலியாகியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (68). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் கடந்த இரண்டு மாதங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது கோவை மக்களை பீதியடையச் செய்துள்ளது.